மீன் வளர்ப்பு in Tamil

வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்!

Posted by:
Published: Friday, January 20, 2012, 14:39 [IST]
Ads by Google
Treatment of Acne Scars 
Get Rid of Skin Acne Scars Fast & Permanently. Visit Our Center.
www.clearskin.in/acne-scars
Cages 
Find Quality Products from Verified Manufacturers.Get a Live Quote Now!
www.alibaba.com

வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்!
மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டுமின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய், தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்காக.
மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.
வீடுகளில் வைப்பதற்கென்று விலைகுறைவான, கலைநயம் மிக்க தொட்டிகளும் உள்ளன. மீன் தொட்டிக்குள் சின்ன சின்ன பாறைகள், கூழாங்கற்கள், செடிகள் போன்றவற்றை கொண்டு அழகுபடுத்தினால்தான் அவை அதற்குரிய இடங்களில் வசிப்பதைப் போல உணரும்.
வாஸ்து மீன்கள்
ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, ரெட் கேப் கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். வசதியானவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை.
இதைத்தவிர சீன வாஸ்து மீனான புளோரா, அரவானா மீன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இஞ்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலைமட்டும் ரூ.25,000!. இத்துடன் கிரீன் ஸ்னோவொய்ட், சில்வர் பிளாக் வகை மீன்களுக்கு உண்டு. இந்த வகை மீன்களுக்கு சிங்கப்பூர் அரசால் சான்றிதழும் வழங்கப்படுகிறதாம். இந்த மீன் ஒன்றின் விலை ரூ. 1,200.
கடல் மீன்கள் வளர்க்கலாம்
கடல் மீன்களை தொட்டியில் வளர்க்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பட்டர்பிளை ஏஞ்சல், புளூரிங் ஏஞ்சல் போன்ற மீன்கள் கட்டாயமாக கடல் நீரில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் செயற்கை உப்பு கலந்த நீரில் வளர்க்கலாம். ஆனால் செயற்கை உப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120. சாதாரணமாக 3 அடி தொட்டிக்கு கடல் மீன்கள் வளர்க்க ரூ. 10,000 வரை செலவாகும்.
இருவேளை உணவு
இந்த மீன்களுக்கு என்று தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்டட் உணவு, வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட்ட டிரை வார்ம்ஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.
மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விடவேண்டும். அப்பொழுதுதான் மீன்கள் ஆரோக்கியமாக இருக்கும். மீன்களை வடிகட்டி நல்ல நீரில் பாதுகாப்பாக வைத்தபின்னர் தண்ணீரை வெளியேற்றி தொட்டியை கழுவவேண்டும்.
தொட்டிகளில் உள்ள வேஸ்டான செடிகளை அகற்றிவிட்டு, பின்னர் தண்ணீரை நிரப்பி அழகு படுத்திய பின்னர் மீன்களை மறுபடியும் தொட்டியில் விடவேண்டும். அடிக்கடி மீன் தொட்டியை சோதனை செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.


மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

Fish-Tank
வீட்டில் மீன்கள் வளர்ப்பது பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்று. மீன் வளர்ப்பதிலும் அதற்கென மீன் காட்சியகம் வைப்பதிலும் பலருக்கு அச்சமும் கவலையும் உண்டாகிறது. சொல்லப்போனால் இந்த பொழுதுபோக்கை சுற்றி பல கட்டுக்கதைகள் புனையப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் நம்ப ஆரம்பித்தால், இந்த அற்புதமான பொழுதுபோக்கை இழந்துவிடுவீர்கள். அப்படிப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா.
இயற்கை சூழலில் அழியும்
மீன் காட்சியகத்தில் விற்கப்படும் மீன்கள் சிறைப்பட்ட சூழலில் இனப்பெருக்கமானவை. அதனால் இந்த மீன்களால் இயற்கையான சூழலில் வாழ முடியாது. அதனால் ஏரி அல்லது ஆற்றில் இந்த மீன்களை விட்டால் சுற்றுச்சூழல் பாதிப்படையும். இந்த இயற்கை சூழலில் அவைகளை விட்டால் அவைகள் உணவு தேட கஷ்டப்படும். மேலும் தன் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாக்கவும் கஷ்டப்படும். இதுவும் ஒரு வகை கட்டுக்கதை தான்.
மீன் எண்ணிக்கை அதிகரித்தால் தொட்டிக்கு ஆபத்து
இதுவும் ஒரு மோசமான கட்டுக்கதையாகும். மீன்கள் சுவாசிப்பதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும். இல்லையென்றால் அவைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். மேலும் அவைகளின் கழிவுகள் அவைகளுக்கு விஷமாக மாறும் முன், அவைகள் நீர்த்து போய் ப்ராசஸ் செய்யப்பட்டு விட வேண்டும். இவை இரண்டையும் குறிப்பிட்ட அளவிலான நீரே செய்துவிடும். அதனால் தண்ணீரை போதுமான காலகட்டத்தில் மாற்றுங்கள்.
புதிதாக மீன் வளர்க்க விரும்புபவர்கள் சின்ன தொட்டியை தான் வாங்க வேண்டும்
கண்டிப்பாக அப்படி இல்லை. சின்ன தொட்டிகளை பராமரிப்பது கடிமானதாகும். இதுவே பெரிய தொட்டி என்றால் பராமரிப்பது சுலபமாகும். மீனின் ஆயுட்காலமும் நீடிக்கும். மீன்களை, முக்கியமாக தங்க மீன்களை பௌலில் போடவே கூடாது. அதில் போட்டால் மீன்கள் சுற்றி வர போதுமான இடம் கிடைப்பதில்லை. அதனால் வேகமாக இறக்கக் கூடும்.
உறிஞ்சலகு மீன்கள் தொட்டிகளை சுத்தமாக வைக்கும்
உறிஞ்சலகு மீன்கள் ஒன்றும் வேட்டை மீன்கள் கிடையாது. மீன்களின் கழிவை ஒன்றும் அவைகள் உண்ணுவதில்லை. சொல்லப்போனால் அவை மீனுக்கு ஆரோக்கியமும் கிடையாது. தொட்டியில் பாசி உருவாகியிருந்தால், அதனை நீக்கி விட வேண்டும். எந்த ஒரு மீனும் தொட்டியை சுத்தமாகவோ தெளிவாகவோ வைத்திருக்காது. தொட்டியை உறிஞ்சலகு மீன்கள் கண்டிப்பாக சுத்தப்படுத்தாது.
தொட்டியின் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்
இது ஒரு ஆபத்தான கட்டுக்கதையாகும். இதனை செயல்படுத்தினால் மீன்கள் செத்து மடியும். தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-20 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை மாற்ற ஒரு மாத காலம் கூட காத்திருக்கலாம். தண்ணீரில் உருவாகும் பாக்டீரியா மீன்களை உயிர் வாழச் செய்யும். அதனால் தண்ணீரை முழுமையாக மாற்றினால், அது மீன்களுக்கு ஆபத்தாய் போய் முடியும்.
மீன் தொட்டியை பராமரிப்பதற்கு அதிக செலவாகும்
முற்றிலும் பொய்யான விஷயம் இது. சொல்லப்போனால் மீன் தொட்டி பெரிதாக பெரிதாக அதை பராமரிப்பது சுலபம். தூய்மையான நீரில் வளரும் மீன்களை வளர்த்தால் பராமரிப்பதும் சுலபம், செலவும் குறையும். தூய்மையான நீரில் வாழும் மீன்கள் புது சூழ்நிலைக்கு ஏற்ப சுலபமாக தன்னை மாற்றிக் கொள்ளும். செலவு என்று பார்த்தால் மீன்களுக்கு தேவையான உணவு, வடிக்கட்டுதல் மற்றும் தேவையான விளக்குகள். ஆனால் இந்த செலவுகள் எல்லாம் குறைவாக தான் இருக்கும். இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் பராமரிப்பதும் சுலபம்.
குறிப்பு
ஆரோக்கியமான மீன் தொட்டி வைத்திருப்பது சுலபம். தேவையானது எல்லாம் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். இதனால் மீன்கள் அதன் போக்கில் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆகவே தண்ணீர் நல்ல நிலையில் இருந்தாலே போதும், வேறு எதுவுமே தேவையில்லை.

1 comment:

  1. Interesting information, thanks for sharing this in tamil

    ReplyDelete